உசிலம்பட்டி அருகே பெண் மர்ம மரணம்

உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் தனது மனைவியை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூரில் விவசாயி பஞ்சராஜா-சாந்தி தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement - WhatsApp

இந்நிலையில் மனைவி சாந்தியை தலையில் பலத்த படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவரது கணவர் பஞ்ச ராஜா அழைத்து சென்றார். மருத்துவர்கள் சாந்தியை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவர்கள் பஞ்சராஜாவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பஞ்சராஜாவை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி சாந்தியை பஞ்சராஜா கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...