ஊட்டியில் காரில் தீ; சென்னை சுற்றுலாப் பயணிகள் சோகம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் கார் திடீரெ தீப்பிடித்தது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சரண் கிஷோர் தனது நண்பர்களுடன் காரில் உதகைக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்தார். கோவை மேட்டுப்பாளையத்தில் காரில் எரிவாயு நிரப்பிவிட்டு உதகை நோக்கி சென்ற காரில் இருந்து புகை வெளியேறி உள்ளது.

உதகை மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது காரில் இருந்து துர்நாற்றமும் புகையும் அதிக அளவில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண் கிஷோர் உடனடியாக காரை ஓரம்கட்டினார். அவரும் அவரது நண்பர்கள் வசீகரன், ஜெகதீஷ் ஆகியோரும் உடனடியாக காரை விட்டு இறங்கிவிட்டனர்.

- Advertisement - WhatsApp

அடுத்த சில நிமிடங்களில் காரின் என்ஜின் பகுதி முழுவதும் தீப்பிடிக்க ஆரம்பித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் மலைப்பாதையில் தீயணைப்பு வாகனம் வந்து சேர்வதற்குள் கார் தீயில் எரிந்து நாசமானது.
சமீபத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கார்களில் அடிக்கடி தீப்பிடிக்கும் சம்பவம் நேரிடுகிறது. வாகனங்களை கால அட்டவணைப்படி அவ்வப்போது சர்வீஸ் செய்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் வாகனம் பழுது பார்ப்பவர்கள்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...