ஒடிசா ரயில் விபத்து – அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரு ரயில்களும் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. தேசிய மீட்பு பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தாலும், இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

- Advertisement - WhatsApp

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளை செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக், ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்து தகவல்களை அளிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்கள்: 1070, 044-2859 3990 செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண் 94458 69843

- Advertisement - WhatsApp

ரயில்வே துறையும் அவசரக் கட்டுப்பாட்டு எண்களை அறிவித்துள்ளது 044 – 25330952, 044-25330953, 044-25354771
ஒடிசா கட்டுப்பாட்டு அறை எண் 06782262286

Howrah – 03326382217
Kharagpur – 8972073925, 9332392339
Balasore – 8249591559, 7978418322
Shalimar – 9903370746
Vijayawada – 0866 2576924
Rajahmundry – 08832420541
Chennai – 044- 25330952, 044-25330953 & 044-25354771

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...