கடன் கொடுத்த பெண் தற்கொலை

வேலூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் தனது சாவிற்கு 5 பேர் காரணம் என கூறியுள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பேரணாம்பட்டு அடுத்த கார்கூரை சேர்ந்த சங்கீதா என்பவர், அதே பகுதியில் துணைத்தலைவராக உள்ள மணிமாறன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சங்கீதா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த நிலையில், அவரிடம் பணம் வாங்கிய பலர் அசலும், வட்டியும் தராமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

- Advertisement - WhatsApp

இதனால் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த சங்கீதா, யாரிடமும் சரியாக பேசவில்லை. இந்த பிரச்சனை குறித்து கணவரிடம் தெரிவித்தபோதும் அவரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்ட செல்வி நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. இதனால் வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது அவர் மின்விசிரியில் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் பேர்ணாம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கீதா உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement - WhatsApp

இதற்கிடையே தன்னுடைய மரணத்திற்கு 5 பேர் காரணம் என்றும் அவர்கள் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்றும் சுவற்றில் எழுதிவைத்துவிட்டு சங்கிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சுவற்றில் எழுதி வைத்த, அம்மு, விஜயகாந்த், சரவணன், வெங்கடேசன், சரிதா ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...