காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்கு

ஈரோடு மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வனத்துறை அதிகாரிகள்  நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஈரோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட  பெருந்துறை அருகேயுள்ள தோரணாவி தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில்,  மர்மநபர்கள் கும்பலாக காட்டு முயல்களை வேட்டையாடுவதாக, வன உயிரின கட்டுபாடு, கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

- Advertisement - WhatsApp

இதன்பேரில், வனச்சரக குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பட்டா நிலங்களில் ஏராளமானோர் கும்பலாக காட்டு முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.

உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சுற்றிவலைத்து பிடித்தனர். இதில், மொத்தம் 107 பேர் பிடிபட்ட நிலையில், அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...