குமரியில் 184 வகையான வண்ணத்துப்பூச்சிகள்

கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டிய காடுகளில் 184 வகையான வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக வனத்துறையினர் தெரித்துள்ளனர்.

கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் 402 சதுர கிலோமீட்டரில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக கன்னியாகுமரி வன விலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு பட்டாம்பூச்சிகளை இனம் கண்டறிய வனத்துறை சார்பில் கோடைகால கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது.

- Advertisement - WhatsApp

இதற்காக பூதப்பாண்டி , வேளிமலை, அழகியபாண்டியபுரம், குலசேகரம், களியல் வனச் சரகங்களில் 5 இடங்கள் கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட வனப்பகுதியில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்ட தில் 184 பட்டாம்பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் தூரிகை கால் பட்டாம் பூச்சி இனங்கள் 67 உள்ளன. ப்ளூஸ் , ஸ்கிப்பர்கள் , வெள்ளை மற்றும் மஞ்சள், ஸ்வாலோடெயில்கள் ஆகியவையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 328 பட்டாம் பூச்சி இனங்கள் உள்ளன. காமன் செலியூட் ப்ளூ இன பட்டாம்பூச்சி தமிழகத்தில் பார்ப்பது மிக அரிதாகும். இந்த வண்ணத்துப்பூச்சி தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...