கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக் கொலை மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ், தன்னுடன் படித்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி சுவாதியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் ரெயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

- Advertisement - WhatsApp

பட்டியலினத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், மாணவியை காதலித்ததை ஏற்றுக் கொள்ள முடியாத சங்ககரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் அவரை கொலை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது ஆவணக் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண்குமார் மற்றும் சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளியாகவும், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கரதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து யுவராஜ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் விதித்த தீர்ப்பில் யுவராஜூக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், அருண், குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித் சந்திரகேரன், செல்வராஜ், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...