முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் பயிலும் மாணவர்களுக்காக சத்தியதேவ் லா அகாடமியை திறந்து வைத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் சமூகத்தில் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளை பெற்றோம். 1961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அடர்களது திறன்களை வளர்க்க, ஓய்வு பெற்ற சந்துரு அவர்களை இயக்குனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் அகாடமியை தொடங்கி வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஏழை, எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் சூர்யாவின் பங்களிப்பை பாராட்டுகிறேன் என்றும் நான்முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
நீதியரசர் சந்தரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்கு பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டு வரும் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொரு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.