தோள் மீது போட்டு வளர்த்த மகன் கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை சேர்ந்தவர் 85 வயதான வையாபுரி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்தமகன் இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது மகனுடன் துரைராஜூடன் வையாபுரி வாழ்ந்து வருகிறார்.

- Advertisement - WhatsApp

இந்நிலையில் இவர்களுக்கு இடையே 3 செண்ட் நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மகனின் மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் கோவில் பண்டிகைக்காக சென்ற நிலையில், தந்தை மகனுக்கு இடையே சொத்து குறித்து மீண்டும தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற தந்தை வையாபுரி, வீட்டின் அருகில் இருந்த மாட்டுக்கொட்டகையில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் துரைராஜை சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பின்னர் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலுடன் வையாபாரி கெங்கவல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...