பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுகன்யா. பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தயவு தாட்சனமின்றி கைது செய்து அதிரடி காட்டினார் சுகன்யா.

- Advertisement - WhatsApp

இந்நிலையில் சுகன்யாவுக்கு நேற்று விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு வந்தது. இதனால் அதிர்ச்சியான திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணத்தை உயரதிகாரியிடம் கேட்டபோது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இன்று காவல் நிலையத்திற்கு வந்த சுகன்யா அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் சுகன்யாவை மீட்டு புதுவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...