வசந்த் அன் கோ வாடிக்கையாளர்களுக்கு பரிசு

தீபாவளி சிறப்பு விற்பனையின் போது வசந்த் அன் கோ-வில் பொருட்கள் வாங்கி வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர்கள் தமிழ்செல்வி வசந்த குமார் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் தங்க நாணயம் பரிசாக வழங்கினர்.

தீபாவளி பண்டிகையின் போது வசந்த் அன் கோ  கிளைகளில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் வாக்கியப் போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள வசந்த் அன் கோ   கிளையில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர் சாந்தி என்பவர் வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்க நாணயத்தை வசந்த் அன் கோ   நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் பரிசாக வழங்கினார்.

- Advertisement - WhatsApp

இந்த நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் வசந்த் அன் கோ கிளை மேலாளர் சந்திரமோகன், மற்றும் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரத்தின குமார், மேல்புரம் வட்டார தலைவர் ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே போல் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வசந்த் அன் கோ  கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனையின் போது பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர் வினோத் என்பவர் வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டு அவருக்கான தங்க நாணயத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் தமிழ் செல்வி வசந்தகுமார் வழங்கினார். பின்னர் வசந்த் அன் கோ  நிறுவனத்தின் 46 வது ஆண்டு கொண்டடும் வகையில் கேக் வெட்டி வசந்த் அன் கோ ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் சோழிங்க நல்லூர் வசந்த் அன் கோ  கிளை மேலாளர் ரவிந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...