வணிகரிடம் லஞ்சம் – உதவி ஆய்வாளர் கைது

சென்னை தாம்பரத்தில் வணிகரிடம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் ராஜன் என்பவர் சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்ற தொழிலாளர் துறையின் உதவி ஆய்வாளர் பொன்னிவளவன் தொழிலாளர்கள் மீது பல்வேறு குறைகளை கூறியுள்ளார். மேலும் 50 ஆயிரம் பணம் தருமாறு கடை உரிமையாளரான ராஜனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

- Advertisement - WhatsApp

பணம் பறிக்கும் நோக்கில் குறைகளை கூறி லஞ்சம் கேட்ட பொன்னிவளவன் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் ராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தனுப்பினர். பொன்னிவளவன் பணத்தை ராஜனிடம் வாங்கிய போது அவரை கையும் களவுமாக லஞ்சஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...