10 நிமிடம் காற்று – 100 ஏக்கர் மரங்கள் நாசம்

கடலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் கேப்பர் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில விவசாயிகள் வாழைப்பயிரை பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

- Advertisement - WhatsApp

தற்போது ராமாபுரம், வழி சோதனை பாளையம், ஒதியடி குப்பம், கீரப்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பூவன், ஏலக்கி, மொந்தன், பேயன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

ஏக்கருக்கு தலா ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், 10 நிமிட சூறைக்காற்றால் வாழை அடியோடு மரங்கள் சாய்ந்ததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...