கலைஞருக்கு உயிரூட்டிய தூய்மைப் பணியாளர்கள்

மதுரை மாநகராட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக 2,752 தூய்மைப் பணியாளர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கி 2024ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டுக்கு இந்த விழாவை நடத்த வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது

- Advertisement - WhatsApp

இந்நிலையில் மதுரை மாநகராட்சி சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 2,752 தூய்மை பணியாளர்களைக் கொண்டு கருணாநிதியின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது.

சாதி,மத, இன, ஏற்றத் தாழ்வெனும் குப்பைகளை களைந்து, நல் சமூகம் படைத்த கலைஞரின் உருவத்தில், தூய்மைப்பணியாளர்கள் அணிவகுத்து நின்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

- Advertisement - WhatsApp

அதாவது அனைத்து தூய்மைப் பணியாளர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் கலைஞரின் உருவம் போல் அணிவகுத்த நிகழ்வை பார்வையிட்ட டிரம்ப் புத்தக நடுவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சான்றிதழையும் வழங்கினர்.

இச் சான்றிதழை தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...