மகள் வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மீனவர் கைது

மகள் வயது குழந்தையை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த வந்த மீனவத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீனவத் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய வீட்டிற்கு அருகிலேயே 8ம் வகுப்பு படித்து வரும் மாணவியின் வீடும் உள்ளது. தந்தை வயதுள்ள செல்வகுமாரின் குழந்தைகளும் தனக்கு நண்பர்கள் என்பதால் சிறுமி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். செல்வகுமாரும் அடிக்கடி சிறுமி வீட்டிற்கு வந்து போவதுமாக இருந்துள்ளார்.

- Advertisement - WhatsApp

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சிறுமி காணாமல் போனார். போலீசாரும் சிறுமியின் பெற்றோரும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

இதற்கிடையே சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த செல்வகுமாரும் கடந்த சில நாட்களாக காணவில்லை. இதனால் போலீசாரின் சந்தேகம் அவர் பக்கம் திரும்ப, அவரது குடும்பத்தாரை விசாரித்துள்ளனர். செல்வகுமார் மீன்பிடி தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றுள்ளதாக அவர்களும் கூறிவிட்டனர்.

மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் 37 வயதான மீன்பிடி தொழிலாளியான சிவகுமாரின் செல்போனின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் நாகப்பட்டினத்தில் இருப்பதாக செல்போன் டவர் அடையாளம் காட்டியது. இதையடுத்து நாகை விரைந்த மகளிர் போலீசார் ஒரு வாடகை வீட்டில் செல்வகுமார், சிறுமியுடன் தங்கியிருந்தது தெரியவந்தது.

- Advertisement - WhatsApp

இதையடுத்து சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த செல்வகுமாரை போக்சோ சட்டத்தில் அவர்களும் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது செல்வகுமார் நீதின்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை எதற்காக சிறைக்கு சென்றார் என்று தெரியாமல் அவரது 3 குழந்தைகளும் அவரது வருகைக்காக ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...