சென்னையில் மேலும் 129 இடங்களில் CCTV

திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் காவல்துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நிகழ்ந்த குற்றங்களில் உண்மை சம்பவங்களை அறிந்து குற்றவாளிகளை கைது செய்யவும் பெரிதும் உதவுகிறது.

- Advertisement - WhatsApp

இதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஜூன் 24ம் தேதி எழும்பூர், காவல் உயரதிகாரிகள் நட்பகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் 43 இடங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எழும்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டு, வீடியோ பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கேமராக்கள் இயங்கவில்லை என்றாலோ, யாரேனும் சேதப்படுத்தினாலோ, தானியங்கி மூலம் இ-மெயில் முகவரிக்கு எச்சரிக்கை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது,

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...