கோயில் நிலத்தை ஆக்கிரமித்த வீடுகளுக்கு சீல்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் என்ன செய்வதென தெரியாமல் பொதுமக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மதுரவாசல் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தில் 9 குடும்பங்கள் வீடு கட்டி கடந்த 30 வருடங்களாக வாழ்ந்து வருகின்றது. இந் நிலையில் இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது என்பதால் காலி செய்யுமாறு கடந்த 2017ம் ஆண்டு இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

- Advertisement - WhatsApp

ஆனாலும் வேறு எங்கும் செல்ல மனமின்றி கடந்த 5 ஆண்டுகளாக வீட்டை காலி செய்ய மறுத்து வந்தனர். இதனால் இந்து அறநிலைத்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையான ஆணையை பெற்றனர். அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் சித்ராதேவி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த 9 வீடுகளுக்கு சீல் வைத்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...