கோவில் பிரச்சனை! அரிவாள் வெட்டு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கோதைநாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சுவாமி கும்பிடுவதில் பிரச்சினை மற்றும் தகராறு இருந்து வந்தது. இதனால் பதற்றத்தை தவிர்ப்பதற்காக, பிரச்சினைக்குரிய கோவில் இருக்கும் பகுதியில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இன்று காலை, ஒரு தரப்பைச் சேர்ந்த பரமன் என்பவரின் மகன் தங்கப்பாண்டியன், மில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர், தங்கப்பாண்டியனை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த தங்கப்பாண்டியன் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

- Advertisement - WhatsApp

இது பற்றி தகவலறிந்த தங்கப்பாண்டியனின் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து, மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கப்பாண்டியனை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர். பதற்றம் அதிகமானதையடுத்து, ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில், போலீசார் மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்

போரட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அந்தப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை இருப்பதால், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...