முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement - WhatsApp

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு தற்போது 82 வயதாகிறது. அவர் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்தார். பிரதி மாதம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடையவே கடந்த ஜூலை மாதம் முதல் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே ஆகஸ்ட் 22ம் தேதி முதல் அவரது ஆக்ஸிஜன் அளவு குறையவே அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சிறுநீரக தொற்று மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக உயிருக்கு போராடி வருகிறார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். சிகிச்சைக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் பிரதமர் உறுதியளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன..

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...