மரக்கன்றுகளை வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை இணைந்து நடத்தும் பசுமை திருவிழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை சார்பாக, பசுமை திருவிழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பசுமையான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில், “பசுமை தமிழ்நாடு” இயக்கத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில், நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குள் 50 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என, திட்டமிடப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

- Advertisement - WhatsApp

இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை தானாக முன்வந்து, அரசுடன் இணைந்து, சிவகங்கை பசுமை திருவிழா என்று பெயரிட்டு, 09.10.2022 முதல் 14.10.2022 வரை ஒருவாரகாலத்தில் 50,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, அதன் தொடக்கமாக, கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் 2,000 மரக்கன்றுகளை பள்ளிகள், கல்லூரிகளை சார்ந்த மாணாக்கர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்திடவும், அதேபோன்று பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை வீடுகளில் நல்லமுறையில் பராமரித்து, பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும். மேலும், மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசுடன் இணைந்து பசுமையாக தமிழகத்தினை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...