செயின் பறிப்பு: தலைமை காவலர் பணியிடை நீக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தலைமைக் காவலர் சபரிகிரி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஜோதி நகர் பகுதிகளில் கடந்த 27ம் தேதி நடந்து சென்ற இரு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். ஒரே நாளில் இரு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்ததுக்கு சென்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறித்த நபர் இறுதியாக தனியார் மதுபான கூடத்திற்கு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

- Advertisement - WhatsApp

அதை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது கோவை போத்தனூர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சபரிகிரி என்பது தெரிய வந்தது மற்றும் அவர் பணிபுரிந்து வந்த செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து எட்டு சவரன் நகை மீட்கப்பட்டு கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...