ஹனிமூன் – சென்னை தம்பதி இந்தோனேசியாவில் பலி

ஹனிமூன் கொண்டாட சென்னையில் இருந்து இந்தோனோசியா சென்ற டாக்டர் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் டாக்டர் விபூஷ்ணியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற டாக்டருக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது.

- Advertisement - WhatsApp

இதையடுத்து தேனிலவை கொண்டாட இந்தோனேசியா நாட்டிற்கு புதுமணத் தம்பதியினர் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள
சுற்றுலா தளத்திற்கு சென்ற அவர்கள் கடலில் மோட்டார் படகில் சென்றபடி புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

படகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று நிலை தடுமாறி இருவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து பொதுமக்கள் தந்த தகவலில் சென்ற கடலோர காவல்படையினர் நீண்ட நேரம் போராடி லோகேஸ்வரனை சடலமாக மீட்டனர்.

விபூஷ்னியாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட நேரம் ஆகியும் விபூஷ்ணியாவின் உடல் கிடைக்காததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

- Advertisement - WhatsApp

இருவரது வீட்டிற்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கதறி அழுதனர். திருமணம் முடித்து 10 நாட்களேயான நிலையில் டாக்டர் தம்பதிக்கு ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...