விவசாயிகளுக்கு பிரத்யேக இணையதளம் 

மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ற வகையில் உரமிடும் முறையினை ஊக்கப்படுத்துவதற்காக தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 2022&23ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

- Advertisement - WhatsApp

அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பை, விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். விவசாயிகள் கணினி மற்றும் செல்போன் மூலமாக http//tnagriculture.in/manvalam என்ற இணையதளத்தை அணுக முடியும். விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக மண்வளம் குறித்த அனைத்து தகவல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அவர்களது செல்போனில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும்.

மண்ணின் தன்மை, நிலத்திடி நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை உள்ளிட்ட விவரங்களும், தழை, மணி சாம்பல் சத்துக்கள் போன்ற விவரங்களும், கந்தகம், இரும்பு உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்களின் விவரங்களை பரிந்துரைகளாக விவசாயிகள் பெறும் வகையில் தமிழ் மண்வளம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

சிஏஜி விவகாரம்… அரசு மீது சந்தேகம்: டெல்லி அரசை கண்டித்த ஐகோர்ட்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு தாமதமாக பதில் தந்ததற்காக ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி...