சிஏஜி விவகாரம்… அரசு மீது சந்தேகம்: டெல்லி அரசை கண்டித்த ஐகோர்ட்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு தாமதமாக பதில் தந்ததற்காக ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந் நிலையில், டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக சிஏஜியின் அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement - WhatsApp

அந்த அறிக்கையில், மதுபான கொள்கை முறைகேடு காரணமாக அரசுக்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

சிஏஜியின் அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்காக ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசை டெல்லி ஐகோர்ட் கண்டித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி சச்சின் தத்தா அமர்வு, “ஆளுநருக்கு அறிக்கைகளை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதமும், இந்த விஷயத்தை நீங்கள் கையாள்வதும் உங்கள் நேர்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து இழுத்தடிப்பது துரதிர்ஷ்டவசமானது.

நீங்கள் உடனடியாக அறிக்கைகளை சபாநாயகருக்கு அனுப்பி, இது குறித்த விவாதத்தை பேரவையில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை.” என்று சாடியுள்ளது.

- Advertisement - WhatsApp

சபாநாயகர் சிறப்பு அமர்வை கூட்ட உத்தரவிடுமாறு பாஜக எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகருக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் முடிவெடுப்பதற்கு முன்னர் இரு தரப்பினரையும் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. இதனிடையே இதில் அரசியல் நோக்கம் உள்ளது என்றும் எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திட்டமிட்டி இருப்பதாகவும் ஆம் ஆத்மி அரசு கூறியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

அரசுப் பள்ளிகளை தாரை வார்க்கவில்லை – அன்பில் மகேஸ் விளக்கம்

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்துக்கு தனியார் பள்ளி சங்கங்கள் தங்களது பங்களிப்பை தருவதாக கூறியதை திரித்து, அரசுப் பள்ளிகளை தத்துக்கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டன அறிக்கை விடுவதை வன்மையாக கண்டிப்பதாக...