திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.

திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார். 2020ல் மகிழ்மதி இயக்கத்தை தொடங்கிய திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement - WhatsApp

திவ்யா சத்யராஜ் அரசியல் களத்தில் குதிப்பார் என நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட கட்சி ஒன்று அழைப்பு விடுத்தது. ஆனால் அது மதச்சார்புள்ள கட்சி என்பதால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக திவ்யா தெரிவித்திருந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அரசியலுக்கு வர உள்ளதாகவும் தான் இணைய உள்ள கட்சி எதுவென்று பின்னர் தெரிவிப்பதாகவும் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 19, 2025ம் தேதியான இன்று திவ்யா சத்யராஜ் திமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்திற்கு திமுகவின் கட்சி கொடியின் கருப்பு – சிவப்பு நிற சேலை அணிந்து வந்தார்.

அதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...

சிஏஜி விவகாரம்… அரசு மீது சந்தேகம்: டெல்லி அரசை கண்டித்த ஐகோர்ட்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு தாமதமாக பதில் தந்ததற்காக ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி...