மதுரையில் செப்டம்பர் 11 அன்று தபா தந்தி நகர் மெயின் ரோடு சுகந்தி நகரை சேர்ந்தவர் கோபால் 49. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி மகேஸ்வரி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.