ஆபத்தான படிக்கட்டுகள் ! அச்சத்துடன் மக்கள் பயணம் !

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகள் சிதிலமடைந்து உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement - WhatsApp

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரமங்கலம் அருகே உள்ள எலுவம்பட்டிக்கு செல்லும் 26ஆம் எண் கொண்டஅரசு பேருந்து படிக்கட்டுகள் சிதிலமடைந்து உள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்வதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும் பயணத்தின்போது பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் ஏறும் போதும் இறங்கும் போதும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ஒருவர் பொதுமக்களை எச்சரித்துக் கொண்டே வருவது பொதுமக்களிடையே அரசு பஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் கேட்டபோது, கிளை மேலாளரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தால் பேருந்து எப்.சி.க்கு விடும்போது வேலை பார்த்துக் கொள்ளலாம் , தற்போது எப்படியாவது அனுசரித்து ஓட்டுங்கள் என்று கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே பேருந்து படிக்கட்டுகளை உடனடியாக சீர் செய்து மக்கள் அச்சமின்றி பயணம் செய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...