மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் விழா

மதுரை:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிராம மக்கள் கொண்டாடும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை பகுதியில் நக்கீரர் தவம் இருக்கும் போது அவரது தவத்தை கலைக்க கட்முகி என்ற பூதம் கடத்திச் சென்றது. அவரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மீட்டு சாப விமோசனம் நீங்க மலைமேல் தனது திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு கீரி கங்கைக்கு நிகரான காசி தீர்த்தத்தை வரவழைத்ததாக ஐதீகம்.

- Advertisement - WhatsApp

இதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டு தோறும் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் மலை மேல் குமரருக்கு புரட்டாசி மாதம் வேல் எடுக்கும் விழாவாக கொண்டாடுவது வழக்கம். மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவினை முன்னிட்டு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் வைத்திருக்கும் வேலை பல்லக்கில் வைத்து திருவீதி உலா வந்து மலை மேல் உள்ள காசி தீர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட து. தொடர்ந்து மலைமேல் உள்ள காசி தீர்த்தத்தில் வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அங்குள்ள குமரருக்கு வேல் சாற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

கிராம மக்கள் தங்களது விவசாயம் செழிக்க வேண்டி சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மாலை பல்லாக்கில் வேல் கொண்டு வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வந்தடையும். அங்குள்ள பழனியாண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வேல் பழனியாண்டவர்க்கு சாற்றப்படும். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று பூ பல்லக்கில் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் மூலஸ்தானத்தின் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கரத்தில் இரவு வேல் சேர்க்கப்படும்.

இவ்விழாவில் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வேலுக்கு அபிஷேகம் இல்லை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடவரை கோவிலாகும் அதனால் இங்கு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை அதற்கு பதிலாக சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

- Advertisement - WhatsApp

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...