மகன்கள் கொடுமை – தாய் துடிதுடித்து பலி

திருவள்ளூரில் தாய் கொல்லப்பட்ட வழக்கில் அவரது 2 மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் சேகர்-மஞ்சுளா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜேஷ், ரஞ்சித் என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

- Advertisement - WhatsApp

இந்நிலையில் நேற்று தாய் மஞ்சுளாவுக்கும், 2-வது மகன் ரஞ்சித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் மஞ்சுளா மூத்த மகன் ராஜேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு தேடி வந்த தாய்க்கு அடைக்கலம் தராமல் மூத்த மகனும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் மஞ்சுளா காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக இளைய மகனுக்கு சரத் என்ற நண்பர் தகவல் தெரிவித்துள்ளார். ராஜேஷ் வீட்டிற்கு விரைந்த ரஞ்சித், நண்பர் உதவியுடன் மஞ்சுளாவை திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மஞ்சுளாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மகன்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மூத்த மகன் ராஜேஷ் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...