விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதே லட்சியம்

விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவேத தனது லட்சியம் என நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement - WhatsApp

இந்தியா முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்களும், தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்களும் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 78 ஆயிரத்து 693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்

இதில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் படித்த மாணவர் பிரபஞ்சன் 720/720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பின்னர் வசந்த் தொலைக்காட்சிக்கு மாணவர் பிரபஞ்சன் அளித்த பேட்டியில், நீட் தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை, அதற்கு கடவுள், ஆசிரியர், பெற்றோர்தான் காரணம் என தெரிவித்தார்.

- Advertisement - WhatsApp

மேலும் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராகி, விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவதே தனது லட்சியம் என தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...