நெல்லை ரவுடி மதுரையில் கொலை

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி மதுரை மாவட்டத்தில் மர்நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா, கருவேலம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

- Advertisement - WhatsApp

போலீஸாரின் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம், பாளையசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பதும் அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. நெல்லை மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த கிருஷ்ணகுமாருக்கு ஏற்கெனவே விரோதிகள் உள்ளதால் அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே கிருஷ்ணகுமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ள போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...