பாகுபலிக்கு சாதாரண காயம்தான் – வனத்துறை ரிடர்ன்

பாகுபலி யானையின் உடல் நிலை சீரடைந்து வருவதால் அதனை தொடர்ந்து கண்காணித்து வந்த சிறப்பு வனக்குழுக்கள் விலக்கி கொள்ளப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டுயானை சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானையின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தனர்.

- Advertisement - WhatsApp

முதுமலை முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 கும்கி யானைகள் தயார் நிலையில் இருந்து பாகுபலி யானையை வனத்துறையினரால் நெருங்க முடியவில்லை. அடிக்கடி தனது இருப்பிடத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருந்த பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளிப்பதும் சவாலான காரியமாக இருந்தது.

இதற்கிடையில் 40க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் பாகுபலி யானையை தொடர்ந்து கண்காணித்து வந்ததில், தற்போது யானையால் உணவு மற்றும் நீர் அருந்த முடியாத அளவுக்கு காயம் ஒன்றும் பெரிதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யானையின் செயல்பாடுகள் வழக்கம் போல் இருப்பதாகவும், இயற்கையாகவே காயம் குணமாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து யானையை கண்காணித்து வந்த 6 குழுக்களும், முதுமலை முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 யானைகளும் திரும்பப் பெறப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...