இறக்கும் தருவாயில் உடல்உறுப்புகள் தானம்

ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் யானமாலா ஆனந்த். தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆனந்த் கடந்தவாரம் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். பங்காருபாளையத்தில் விபத்தில் சிக்கிய ஆனந்த் அருகில் உள்ள வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

- Advertisement - WhatsApp

இந்நிலையில், ஆனந்த்தின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் அடையாத நிலையில் அவருடைய மூளை தனது செயல்பாட்டினை நிறுத்திக்கொண்டது. இதையடுத்து அவர் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர் தெரிவித்ததால், ஆனந்த்தின் உடல்உறுப்புகளை பிறருக்கு தானமாக வழங்க அவரது உறவினர்கள் சம்மதித்தனர். பின்னர் ஆனந்த்தின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, பிற மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆனந்த்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையை பொறுத்தவரை அதிக அளவில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...