வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், கடல் அட்டை போன்றவை கடத்தபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

- Advertisement - WhatsApp

இதை அடுத்து இன்று அதிகாலை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பெரியபட்டினம் தெற்கு புது குடியிருப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இலங்கைக்கு செல்ல இருந்த படகு ஒன்றை சோதனை இட்டபோது அதில் 12 பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பெரிய பட்டினத்தை சேர்ந்த முகமது மீராசா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதிவு எண் இல்லாத அந்த படகை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து புதுமடம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...