மீனவர்கள் ஸ்டிரைக்: தேர்தலை புறக்கணிக்க திட்டம்

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

- Advertisement - WhatsApp

மீனவர்கள் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும், அதிலிருந்து 23 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் இலங்கை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரம் மீனவ சங்க பிரதிநிதிகள் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர் அதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள 23 மீனவர்களையும் படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இது மட்டுமன்றி கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இலங்கை அரசின் வசமுள்ள 150 மேற்பட்ட விசைப்படகுகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement - WhatsApp

அதன்படி இன்று ஒரு நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...