வெளியில சொன்னா அப்பா, அம்மாவ கொன்னுடுவோம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லபாளையம் கிராமத்தில் கடை நடத்தி வரும் முனியாண்டி மற்றும் சந்திரன்  இருவரும் நண்பர்கள். அதே பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதி 9ம் வகுப்பு படிக்கும் மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.  தனியாக இருப்பதை கவனித்த முனியாண்டி மற்றும் சந்திரன் இருவரும்  மாணவி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை மிரட்டி இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது மட்டுமின்றி இந்த விஷயத்தை வெளியில் கூறினால் மாணவியின் பெற்றோரை கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளனர்.

- Advertisement - WhatsApp

இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குற்றவாளிகள் மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போதேல்லாம் அடிக்கடி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களாக இந்த கொடுமை நடந்து வந்துள்ள நிலையில், மாணவி எப்போதும் சோகமாக இருந்ததை கண்டு பெற்றோர் தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்போதுதான் வேறு வழியின்றி தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் வேதனை அடைந்த பெற்றோர் இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  முனியாண்டி மற்றும் சந்திரனை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...