விநாயகர் சிலை சப்பரத்தில் மின்சாரம்! 2 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊர்வலத்திற்கு தயாரக இருந்த விநாயகர் சிலையின் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் பலியாகினர். மேலும் மின்சாரம் பாயந்ததில் 2 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ளது சொக்கநாதன்புத்தூர். இந்த ஊரில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள் வழிபாடுகள் செய்து வந்தனர். நாளை, இங்குள்ள விநாயகர் சிலையை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. சிலையை கொண்டு செல்லும் போது, அருகில் இருக்கும் மரக்கிளையில் உரசி விடக்கூடாது என்பதற்காக நேற்றிரவு, சிலை வைக்கப்பட்டிருந்த சப்பரத்தை அந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இடம் மாற்றி வைக்க முயற்சி செய்தனர்.

- Advertisement - WhatsApp

அப்போது எதிர்பாராத விதமாக விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த சப்பரத்தில் இருந்த டிஜிட்டல் பேனரின் கம்பி, உயர்அழுத்த மின்சார வயரில் உரசியது. இதில் சப்பரத்தை பிடித்திருந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் முனீஸ்வரன் (24), மாரிமுத்து (33), செல்லப்பாண்டியன் (42), செல்வகிருஷ்ணன் (32) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்த 4 பேரையும் மீட்டு தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முனீஸ்வரன், மாரிமுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க இருந்த நிலையில், சிலை இருந்த சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...