விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு பலத்த சாரல் மழை பெய்தது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், தற்போது தான் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை, ஜவுளி கடைகள் மற்றும் நடைபாதை கடைகளில் வியாபாரம் துவங்கியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் இருந்து இரவு வரை சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் நடைபாதை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் ஊழியர்களுக்கு போனஸ் பணம் வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் பணம் வாங்கியவுடன் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பட்டாசுகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வருவார்கள். நேற்று இரவு நேரத்தில் மழை பெய்ததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இனி வரும் 6 நாட்களில் தீபாவளி பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். இந்த நிலையில் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்து வரும் 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தில் வியாபாரம், வர்த்தகம், நடைபாதை வியாபாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபாதை வியாபாரத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இருந்தாலும் தீபாவளி பண்டிகை வியாபாரம் நன்றாக நடைபெறும் என்ற நம்பிக்கையில், நடைபாதை வியாபாரிகள் உள்ளனர்.
சார்ந்த செய்திகள்
Largest Metro Station Panagal Park; Says official
Udhayatamil - 0
The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...
2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு
Udhayatamil - 0
தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...
மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை
Udhayatamil - 0
வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...
சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்
Udhayatamil - 0
பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...