ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 28ம் தேதி விக்னேஷ்வர பூஜை, தீர்த்த அலங்காரத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 6 மணிக்கு ரக்ஷாபந்தனம், அங்குரார்பணம், காயத்திரி ஹோமம் நடந்தது. ஆகஸ்ட் 29ம் தேதி 2ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும், ஆகஸ்ட் 30ம் தேதி 4, 5ம் கால பூஜையும், ஆகஸ்ட் 31ம் தேதி காலை 6ம் கால யாகசாலை பூஜை நடந்தது.

- Advertisement - WhatsApp

ஆகஸ்ட் 31ம் தேதி காலை 7 மணிக்கு கும்ப பூஜை முடிந்து வேதமந்திரங்கள், மேள, தாளம் முழங்க புனித நீர் உள்ள கும்பங்கள் புறப்பாடு நடந்தது. காலை 9.20 மணிக்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், பி.ஆர்.கிரானைட்ஸ் உரிமையாளருமான பி.ராஜசேகரன் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முப்புலி சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி, ஜல்லிக்கட்டு பேரவை மாநில செயலாளர் நாராயனன், மாவட்ட தலைவர் பழனி, துணை செயலாளர் பழனிவேல், செயற்குழு உறுப்பினர் வீராசாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கஷ்டங்கள் தீரும் என நம்பி வந்த ஏராளமான பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார்.

சார்ந்த செய்திகள்

விஜயதசமியன்று வீணை இசை வழிபாடு

விஜயதசமியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 108 வீணை இசை வழிபாடு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்உலக பிரசித்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த...