மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில் 57 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் எம் .வி.எம். குடும்பத்தினர், முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர் .
பாஜக மாநில விவசாய அணி செயலாளர் மணி முத்தையா மற்றும் வள்ளி மயில் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் எம்.மருது பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர் .
இதில், கணேசன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கராஜன், செந்தில் ,மயில் ,பி கே எம் ராஜா ,பூசாரி சேகர் ,கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ,கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.