பட்டாசு ஆலைகளில் ஆய்வு ! சிறப்பு குழு அமைப்பு !

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் நடைபெறும் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, 4 சிறப்பு தனிப்படைகளை அமைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 47 நாட்கள் மட்டுமே உள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக சிவகாசி ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தடைசெய்யப்பட்ட ரசாயனப் பொருளான (பேரியம் நைட்ரேட்) பச்சை உப்பு, பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றதா, சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றதா என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனை கண்காணிப்பதற்காக சிறப்பு ஆய்வு குழுவை அமைத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தடை செய்யப்பட்ட மூலப் பொருள் பயன்படுத்தப் படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையிலும் வட்டாட்சியர், தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர், தீயணைப்பு நிலைய அலுவலர், காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆகிய 4 பேர் கொண்ட, 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் இன்று முதல், வரும் 25ம் தேதி வரை தினசரி பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஆய்வு செய்வார்கள். தனிப்படை ஆய்வு குழுவினர் பட்டாசு ஆலைகளில், தடை செய்யப்பட்ட மூலப் பொருள் பயன்படுத்தப் படுகிறதா, இரவு நேரங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள சரவெடிகள் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்வார்கள். மேலும் பட்டாசு ஆலைகள் தவிர்த்து, வீடுகள் மற்றும் கூடாரங்கள் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதை தடுக்கும் பணிகளிலும் ஈடுபடுவார்கள். தனிப்படை ஆய்வுக்குழு விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர் ஆய்வில் ஈடுபடுவார்கள். விதி மீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...