தமிழகத்தின் அடுத்த அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விரோத பணம் பரிவர்த்தனை தொடர்பாக அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

- Advertisement - WhatsApp

தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அவர் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்து சட்டவிரோதம் இல்லை என்று தீர்ப்பு கூறி மேகலாவின் ஆட்கொணவு மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில் யாரும் எதிர்ப்பாக்காத நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement - WhatsApp

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களிலும், விழுப்புரம் சண்முகபுர காலனியில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. மேலும் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்பியுமான கெளதம சிகாமணி வீடு, அலுவலங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.

காலை முதல் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருவது திமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...