தந்தையுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, இளம்பெண் தனது தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நெய்வேலியில் உள்ள திடீர் குப்பத்தில் ராமமூர்த்தி, சந்தியா தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமமூர்த்தி அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement - WhatsApp

இதனால் ஆத்திரமடைந்த சந்தியா தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தந்தை வீடான செம்மாங்குப்பத்திற்கு சென்றுவிட்டார்.  இந்நிலையில் செம்மாங்குப்பத்திற்கு சென்ற ராமமூர்த்தி தான் திருந்திவிட்டதாகக் கூறி சந்தியாவை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தியாவும், அவரது தந்தையும் அங்கிருந்த கயிறை எடுத்து ராமமூர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ராமமூர்த்தியை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட சந்தியாவும், அவரது தந்தையும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கணவனை, தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 குழந்தைகளின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...