காரியாப்பட்டியில் பனைமரம் நடும் திட்டம் ! பசுமை பாரதம்!!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்துவரும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக கிராமங்கள் தோறும் பனைவிதைகள் நடும் பணி துவங்கப்பட்டது.

காரியாபட்டி ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . காரியாபட்டி கல்குறிச்சி குண்டாற்று தடுப்பணை பகுதியில் பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் கல்குறிச்சி கணேசன் , வக்கணாங்குண்டு தேவி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தடுப்பணை அமைந்துள்ள ஆற்றின் இரண்டு கரைப் பகுதிகளில் முதற்கட்டமாக 200 க்கு மேற்பட்ட பனைவிதைகள் நட்டுவைக்கப் பட்டது. ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் பனைவிதை நடும்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

- Advertisement - WhatsApp

பசுமை அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம் கூறிய போது: தமிழகத்தில் அடையாளமாக இருந்த பனைமரங்கள் இன்று காணாமல் போய்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரை சேமித்து வறட்சியிலும் நன்றாக வளரும் பனைமரங்கள். மூலம் பல்வேறு பலன்கள் கிடைத்தது. மண் அரிப்பை ஏற்படாமல் கண்மாய் கரைகளை பாதுகாக்க கூடிய மரம் . நமக்கு பயன்தரும் பனைமரங்களை மீண்டும் பயிர்செய் வதற்காக அனைத்து கிராமங்களிலும் ஆற்றுகரைப் பகுதி, குளம், கண்மாய் கரை பகுதியில் பனை விதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம் தமிழக அரசின் ஊராட்சி , வேளாண்மை , தோட்டக்கலைத் துறை வனத்துறை மற்றும் வருவாய் துறையினரின் உறுதுணை யோடு பள்ளி கல்லூரி மாணவர்களின் ஒத்துழைப்போடு காரியாபட்டி ஒன்றியத்தில் 5 ஆயிரம் பனைவிதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...